இந்தியாவில் புதிதாக 841 பேருக்கு கொரோனா: 3 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: இந்தியாவில் புதிதாக 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை 8 மணிவரையிலான நிலவரப்படி வௌியிட்ட அறிக்கையில், “கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 227 நாட்களில் அதிகபட்சமாக உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4,309ஆக பதிவாகி உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என 3 பேர் தொற்றுக்கு பலியாகி விட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இந்தியாவில் புதிதாக 841 பேருக்கு கொரோனா: 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: