தேவரியம்பாக்கம் ஊராட்சியில் பாலர் சபை கூட்டம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ஊராட்சி தலைவர் அஜய்குமார் தலைமையில், பாலர் சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. நிகழச்சிக்கு, சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் மாவட்ட திட்ட இயக்குநர் செல்வக்குமார், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் மணிமாறன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

இக்கூட்டத்தில், ஜனநாயக முறைப்படி வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், துணை தலைவர், செயலாளர், விவசாயம் சுயதொழில் சுற்றுச்சூழல் நலவாழ்வு உள்ளிட்ட பல்வேறு துறை உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் குழந்தை பாதுகாப்பு அலுவலர் யசோதரன், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன், காஞ்சனா, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எழில், தோண்டாங்குலம் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஜான்சிராணி, மாநில ஊரக வளர்ச்சித்துறை நிறுவன பயிற்சியாளர்கள் அரவிந்தன், கோகுல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

The post தேவரியம்பாக்கம் ஊராட்சியில் பாலர் சபை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: