திருப்பட்டினம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பல் பரிசோதனை

 

காரைக்கால்,டிச.30: திருப்பட்டினம் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு பல் பரிசோதனை நடந்தது. காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் பகுதி அரசு புதிய தொடக்கப்பள்ளியில் தேசிய வாய் சுகாதாரத்திட்டம் மூலம் பள்ளி பொறுப்பாசிரியை அன்புச்செல்வி ஏற்பாட்டில் காரைக்கால் அரசு பொது மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மருத்துவக்குழுவினர் பங்கேற்று பல் மருத்துவ பரிசோதனை நவீன கருவிகளை பயன்படுத்தி மேற்கொண்டனர்.

இதில் பல மாணவர்களுக்கு பல் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டு, முதலுதவி அளிக்கப் பட்டு அரசு பொது மருத்துவனைக்கு அடுத்தக்கட்ட பரிசோதனைக்கு வருமாறு பரிந்துரைத்தனர். மேலும், ஒரு சில மாணவர்கள் சரளமாக பேச முடியாமல் இருந்ததை கண்டறிந்த மருத்துவக் குழுவினர், அவர்களுக்கு பேச்சுப் பயிற்சியளித்தனர். பற்களை பாதுகாப்பது தொடர்பாக மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மருத்துவக் குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.

The post திருப்பட்டினம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பல் பரிசோதனை appeared first on Dinakaran.

Related Stories: