நடிகர் சுரேஷ் கோபி முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சுரேஷ் கோபி பாஜ மேலவை உறுப்பினராக பொறுப்பு வகித்து வந்தார். கடந்த மாதம் கோழிக்கோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுரேஷ் கோபி, ஒரு தனியார் தொலைக்காட்சியை சேர்ந்த பெண் நிருபரின் தோளில் தொட்டு பேசினார்.

அந்தப் பெண் நிருபர் விலகிய போதிலும் மீண்டும் சுரேஷ் கோபி அவரை தொட்டார். இதுகுறித்து அந்தப் பெண் நிருபர் கோழிக்கோடு நடக்காவு போலீசில் புகார் செய்தார். போலீசார் சுரேஷ் கோபி மீது 35ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி நடிகர் சுரேஷ் கோபி கேரள உயர்நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

The post நடிகர் சுரேஷ் கோபி முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு appeared first on Dinakaran.

Related Stories: