மாயனூர் தடுப்பணைக்கு மாற்றம் செய்யுங்கள் மாவட்ட மைய நூலகத்தில் தேசிய நூலக வார நிறைவு விழா

திருச்சி,டிச.28: திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் நேற்று நடைபெற்ற 56வது தேசிய நூலக வார நிறைவு விழா நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். திருச்சி மாவட்ட வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற 56-வது தேசிய நூலக வார விழாவில் ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் புத்தக திறனாய்வில் பங்கு பெற்ற மாணவிக்கு, மூத்தோர்களுக்கான கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு மற்றும் பொது வாசகா்களுக்கான கதை, கட்டுரை, கவிதை ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றோர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேடயம் வழங்கினார், சதுரங்க பயிற்சியாளருக்கு விருதும், அதிக அளவில் பள்ளி மாணவா்களை நூலக உறுப்பினா்களாக சோ்த்த தூயவளனார் பள்ளி ஆசிரியருக்கு கேடயமும், நூலக நண்பா் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட தன்னார்வளா்களுக்கு கேடயமும், மற்றும் ரோட்டாி பீனிக்ஸ் மூலம் மாவட்ட மைய நூலகத்தில் போட்டித்தோ்வு மாணவா்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தி வரும் என்.ஆர் அகாடமி இயக்குனரை பாராட்டினார்.

மேலும் கலைஞா் நூற்றாண்டு விழா உறுப்பினா் சோ்க்கை முகாமில் அதிக உறுப்பினா்களை சோ்த்த நூலகங்களுக்கு கேடயங்கள் வழங்கினார். மேலும், நூலக வார விழாவினை யொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் நடுவா்களாக செயல்பட்ட வாசகா் வட்ட நிர்வாகிகளை கௌரவித்தும், திருச்சி ராயல் லயன் சங்கத்தை சோ்ந்த 14 நபா்களை புரவலா்களாக இணைத்தும் அமைச்சர் விழா பேருரையாற்றினார். முன்னதாக, மத்திய சிறை மேலாளா் திருமுருகன் எழுதிய `என்னுயிரே’ என்ற நூலை அமைச்சர் வெளியிட்டார். நிகழ்ச்சியில், திருச்சி வருவாய் கோட்டாட்சியா் பார்த்திபன், மாவட்ட மைய நூலக அலுவலா் சிவக்குமார், மத்திய சிறை மேலாளார் திருமுருகன், மண்டல தலைவர் மதிவாணன், வாசகர் வட்ட தலைவர் கோவிந்தசாமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மாயனூர் தடுப்பணைக்கு மாற்றம் செய்யுங்கள் மாவட்ட மைய நூலகத்தில் தேசிய நூலக வார நிறைவு விழா appeared first on Dinakaran.

Related Stories: