ஆருத்ரா தரிசன வழிபாடு

பள்ளிபாளையம், டிச.28: மார்கழி மாதம் திருவாதிரை நச்சத்திர நாளில் சிவபெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, ஆருத்ரா சிறப்பு தரிசனம் செய்வது வழக்கம். இதன்படி பள்ளிபாளையம் அக்ரஹாரம் காசிவிசாலாட்சி உடனமர் காசிவிஸ்வேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. சிவபெருமானுக்கு களியும் ஏழு கறி கூட்டும் படைத்து பூஜைகள் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

The post ஆருத்ரா தரிசன வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: