சென்னை: சென்னையில் நாட்டு வெடிகளை சட்டவிரோதமாக வாங்கி விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். நெசப்பாக்கத்தில் உள்ள செல்வகுமார் வீட்டில் இருந்து 20 கிலோ வெடிகள், பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. வெடிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக கேட்டரிங் சர்வீஸ் உரிமையாளர் செல்வகுமார் கைது செய்யப்பட்டார்.
The post சென்னையில் நாட்டு வெடிகளை சட்டவிரோதமாக வாங்கி விற்பனை செய்தவர் கைது..!! appeared first on Dinakaran.