இக்கூட்டத்தில் தி.மு.க. எம்பி, எம்எல்ஏக்கள், தலைமைச் செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர – பகுதி – ஒன்றிய – நகர – பேரூர் செயலாளர்கள், தி.மு.க. அணிகளின் மாநில நிர்வாகிகள் – மாவட்ட அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட தி.மு.க.வினர் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். வண்டலூர் அருகே, கிளாம்பாக்கத்தில் ரூ.300 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை இம்மாத இறுதிக்குள் திறந்து வைக்க வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழியெங்கும் வரவேற்பு ஏற்பாடுகள் செய்வது குறித்தும், இத்திறப்பு விழாவில் தி.மு.க.வினர் ஆயிரக்கணக்கில் பங்கேற்பது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட உள்ளது. ஜனவரி மாதம் சேலத்தில் நடைபெற உள்ள தி.மு.க. இளைஞர் அணி 2வது மாநில மாநாட்டில் இம்மாவட்டத்தில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.க. இளைஞர் அணியினர் பங்கேற்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.
The post காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் இன்று அவசர செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம்: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.