பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் அருகே இருக்கும் வத்ரி விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்ப தரையிறங்கியபோது ஆள் கடத்தல் நடப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள், விமானத்தை தடுத்து நிறுத்தினர்.அதில், 2 சிறுவர்கள் உட்பட 25 பேர் பிரான்சில் தங்கிவிட அதிகாரிகளிடம் அடைக்கலம் கோரினர். 4 நாட்களாக பயணிகள் அனைவரிடமும் விசாரணை நடந்தது. பின்னர் 25 பேர் மற்றும் 2 ஏஜென்ட்டுகள் தவிர மற்ற 276 பயணிகளும் விமானத்தில் புறப்பட்டனர். அந்த விமானம் நேற்று காலை 4.30 மணிக்கு மும்பை விமான நிலையத்தை வந்தடைந்தது.
The post ஆள்கடத்தல் சந்தேகத்தில் பிரான்சில் தடுத்து நிறுத்தப்பட்ட விமானம் மும்பை வந்தடைந்தது: 276 பயணிகள் நாடு திரும்பினர் appeared first on Dinakaran.