சுனாமி கோர தாண்டவத்தின் 19ம் ஆண்டு நினைவு தினம்; பொதுமக்கள் கடற்கரையில் பால் ஊற்றி அஞ்சலி..!!

சுனாமியில் உயிர் நீத்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி நாகை மாவட்டம் முழுவதும் உள்ள மீனவர்கள் இன்று 19ம் ஆண்டு சுனாமி நினைவு தின கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமி பேரலை தாக்கியது. இதனால் கடலோர கிராமங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. கடலோர மாவட்டங்களில் வசித்த ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். சென்னை கடலோர பகுதிகளிலும் உயிரிழப்புகள் அதிகமாக இருந்தன. இதனால், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26ம் தேதி சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

The post சுனாமி கோர தாண்டவத்தின் 19ம் ஆண்டு நினைவு தினம்; பொதுமக்கள் கடற்கரையில் பால் ஊற்றி அஞ்சலி..!! appeared first on Dinakaran.

Related Stories: