காரைக்காலில் கிறிஸ்துமஸ் குடில்திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் தூய்மை பணி

காரைக்கால்,டிச.25: திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் தூய்மை பணி நடந்தது.சென்னையில் இயங்கி வரும் ஆலயங்களை சுத்தம் செய்யும் இறைப்பணி மன்றம் மூலமாக மாவட்ட கலெக்டரின் அனுமதியின் பேரில் திருநள்ளாறில் அமைந்துள்ள  தர்பாரன்னேஸ்வரர் கோயிலின் உள்ளேயும், கோயில் சுற்றியுள்ள பகுதிகளிலும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இப்பணிகளை துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) வெங்கடகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிறுவனத்தின் மேலாளர் கணேசன் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அனைத்து பகுதிகளையும் தூய்மை செய்தல் மற்றும் மரக்கன்றுகள் நடும் பணியினையும் மேற்கொண்டனர். மேலும் பதாகைகள் ஏத்திக் கொண்டு தூய்மை நலன் பாதுகாப்பு விழிப்புணர்வு செய்தனர். பிளாஸ்டிக் பொருள்களை ஒழிக்கும் வகையில் அனைவருக்கும் (பக்தர்களுக்கு) துணி பைகளையும் வழங்கினர்.

The post காரைக்காலில் கிறிஸ்துமஸ் குடில்திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் தூய்மை பணி appeared first on Dinakaran.

Related Stories: