குளித்தலை அருகேசேவல் சண்டை: 3 பேர் கைது

குளித்தலை, டிச.24: கரூர் மாவட்டம், குளித்தலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கண்டியூர் சுடுகாடு அருகே வாழைதோப்பில் சட்ட விரோதமாக சேவல் சண்டை நடத்துவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் குளித்தலை போலீசார் விரைந்து சென்று கண்டியூர் வாழைத்தோப்பில் சேவல்சண்டை நடத்திய பொய்யாமணி நடைபாலம் பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (26), மேல தாலியாம்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் (28), கண்டியூர் பகுதியைச் சேர்ந்த பாலு (32) ஆகிய 3 பேரை குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

The post குளித்தலை அருகேசேவல் சண்டை: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: