உத்தமநல்லூர் கிராமத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு

மதுராந்தகம்: உத்தமநல்லூர் கிராமத்தில் புதிய ரேஷன் கடையை அச்சிறுப்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் ஒரத்தி கண்ணன் திறந்து ைவத்தார். மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், திருமுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட உத்தமல்லூர் கிராமத்தில் புதிய ரேஷன் கடை அமைத்துத்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.அதன்பேரில், உத்தமல்லூர் கிராமத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் பெருமாள் இதில் தலைமை தாங்கினார்.

துணை தலைவர் பாபு முன்னிலை வகித்தார். முன்னதாக ஊராட்சி செயலர் விஜயகுமார் அனைவரையும் வரவேற்றார். இதில், சிறப்பு விருந்தினராக அச்சிறுப்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் ஒரத்தி கண்ணன் கலந்துகொண்டு, புதிய ரேஷன் கடையை, மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்டக்குழு உறுப்பினர் வசந்தா கோகுல கண்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் மேகலா வெங்கடேசன், பார்த்தசாரதி, கண்டிகை ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post உத்தமநல்லூர் கிராமத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: