திருச்சியில் ஆட்சி மொழி சட்ட வாரவிழா பேரணி

திருச்சி.டிச.23: திருச்சியில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழிச் சட்ட வாரவிழா விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.திருச்சி காந்தி மார்க்கெட் காவல்நிலையத்தில் தொடங்கிய பேரணியை கலெக்டர் பிரதீப் குமார் பேரணியை தொடங்கி வைத்தார். அப்போது ஆட்சிமொழிச் சட்டம் குறித்த விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை வாகனங்களில் ஒட்டி கலெக்டர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட பேரணி திருச்சி தெப்பக்குளம் பிஷப்ஹீபர் பள்ளியில் நிறைவடைந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியில் 150க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அதில் ஆட்சி மொழி சட்டம் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திக் கொண்டு மாணவ, மாணவிகள் முழக்கமிட்டு சென்றனர். இந்நிகழ்வில், துணை இயக்குநர் இளங்கோ, திருச்சி மாவட்ட தமிழ் அமைப்புகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தமிழறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post திருச்சியில் ஆட்சி மொழி சட்ட வாரவிழா பேரணி appeared first on Dinakaran.

Related Stories: