இந்த நிறுவனம் குறைவான எண்ணிக்கையில் பணியாளர்களை அனுப்பி மோசடி செய்து மாநகராட்சியிடம் ₹32.44 கோடி வசூல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அமலாக்கத்துறை சுஜித் பட்கர் உட்பட மூவர் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் எல்.எச்.எம்.எஸ். நிறுவனத்தின் பங்குதாரர்களான சுஜித் பட்கர், டாக்டர் ஹேமந்த் குப்தா, ராஜீவ் சாலுங்கே, சஞ்சீவ் ஷா மற்றும் அவர்களது நண்பரான சுனில் கதம் ஆகிய 5 பேரது சொத்துக்களையும் அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. முடக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு ₹12.24 கோடியாகும்.
The post கொரோனா சிகிச்சை மைய ஊழல் வழக்கில் சஞ்சய் ராவத் நண்பர் உட்பட 5 பேரின் 12 கோடி மதிப்பு சொத்துக்கள் முடக்கம் appeared first on Dinakaran.