சஞ்சய் சிங் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரானதால் மல்யுத்தத்தை விட்டே நான் வெளியேறுகிறேன் : சாக்ஷி மாலிக்

டெல்லி : இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் முடிவை அடுத்து மல்யுத்த போட்டியிலிருந்து விலகுவதாக சாக்ஷி மாலிக் அறிவித்துள்ளார். பிரிஜ்பூஷனின் உதவியாளர் சஞ்சய் சிங் மல்யுத்த புதிய கூட்டமைப்பின் தலைவரானதால் சாக்ஷி மாலிக் கதறி அழுதுள்ளார். முன்னதாக மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பிரிஜ் பூஷன் மீது வீராங்கனைகள் புகாரளித்தனர். பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யக் கோரி மல்யுத்த வீரர்கள் டெல்லியில் 40 நாட்கள் போராட்டம் நடத்தினர். மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பெண் ஒருவரை நியமிக்க வீரர்கள் கோரிய நிலையில் அது நிராகரிக்கப்பட்டது.

The post சஞ்சய் சிங் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரானதால் மல்யுத்தத்தை விட்டே நான் வெளியேறுகிறேன் : சாக்ஷி மாலிக் appeared first on Dinakaran.

Related Stories: