வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு

அரியலூர், டிச.21: அரிய லூர் மாவட்டம், செந்துறை குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர் மற்றும் பொறுப்பாளர்களுக்கான நேற்று நடைபெற்ற தேர்தலில் கீழ்கண்டவர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தேர்தல் ஆணையர் காயத்ரி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: செந்துறை குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்க பொறுப்பாளர்களுக்கான தேர்தலில் போட்டியிட விருப்ப மனு டிச.19 அன்று பெறப்பட்டது. வழக்குரைஞர் சங்க உறுப்பினர்கள் விருப்ப மனுக்கள் கொடுத்திருந்த நிலையில், எந்த ஒரு பதவிக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட மனுக்கள் வராத காரணத்தினால் விண்ணப்பித்தவர்களின் விருப்ப மனு பரிசீலிக்கப்பட்டு, அதில் போட்டியின்றி தலைவராக காரல் மார்க்ஸம், செயலாளராக செல்வமணியும், துணைத் தலைவராக கார்த்திகேயனும், துணைச் செயலாளராக பொன்செல்வமும், நூலகராக சந்தோஷ்குமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

The post வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: