8 இடங்களில் சுமார் 1500 மீட்டர்கள் கொண்ட கன்டெய்ன்மென்ட் பூம்கள் நிறுவப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் 6 ஆயில் ஸ்கிம்மர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதனால், தண்ணீரில் எண்ணெய் மேலும் குறைந்துள்ளது. நீரிலிருந்து எண்ணெய் படலங்களை அகற்ற சுமார் 24,000 எண்ணைய் உறிஞ்சும் பட்டைகள் மற்றும் 1000 மீட்டர் உறிஞ்சக்கூடிய சாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளன. இயந்திரமயமாக்கப்பட்ட தூய்மை முயற்சிகளில் 5ல் 3 கரையோர பகுதிகளில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை முடிவடையும் நிலையில் உள்ளன.
இயந்திரங்களை பயன்படுத்தி வீடுகளை சுத்தம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களின் வழங்கப்பட்டுள்ளது. விதிமுறைகளுக்கு இணங்குவது கண்காணிக்கப்படுகிறது. சிபிசிஎல் ஆலை மூலம் தொடர்ந்து பயன்படுத்தப்படும் 3 நடமாடும் மருத்துவ பிரிவுகள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை, சுமார் 2700க்கும் அதிகமான தனிநபர்கள் பயனடைந்துள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post எண்ணூரில் 125 படகுகள் மூலம் 240 சிறந்த பணியாளர்களுடன் எண்ணெய் படலம் அகற்றம்: சிபிசிஎல் நிறுவனம் தகவல் appeared first on Dinakaran.