மேகதாது அணை கட்ட அனுமதி வழங்க வேண்டும்: பிரதமர் மோடியிடம் கர்நாடக முதல்வர் சித்தராமையா வலியுறுத்தல்

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா, நான்கு நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் முதல்வர் சித்தராமையா, நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மனு அளித்தார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் முதல்வர் கூறும்போது, ‘‘காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டம் செயல்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்து, அதற்கான திட்ட வரைவை தயாரித்து ஒன்றிய அரசின் அனுமதிக்கு அனுப்பியுள்ளோம்.

இத்திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாதுவில் அணை கட்டும் திட்டம் செயல்படுத்த உடனடியாக ஒன்றிய அரசு அனுமதி வழங்க வேண்டும்’ என்று பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

The post மேகதாது அணை கட்ட அனுமதி வழங்க வேண்டும்: பிரதமர் மோடியிடம் கர்நாடக முதல்வர் சித்தராமையா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: