ராமர் கோயில் குடமுழுக்கு: அத்வானி, ஜோஷி பங்கேற்கவில்லை


அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ேவண்டும் என்று போராடிய அத்வானி, ஜோஷி ஆகிய தலைவர்கள், குடமுழுக்கு விழாவில் பங்கேற்கவில்லை. அடுத்தாண்டு ஜனவரி 22ம் தேதி அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. பிரமாண்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்து வரும் நிலையில், ராம் மந்திர் அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் இயக்கத்தை மூச்சுக்காற்றாக மாற்றிய பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை.

அத்வானிக்கு 96 வயதும், முரளி மனோகர் ஜோஷிக்கு 89 வயதும் ஆவதால், அவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டோம். அவர்கள் இருவரும் எங்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர்’ என்றார்.

The post ராமர் கோயில் குடமுழுக்கு: அத்வானி, ஜோஷி பங்கேற்கவில்லை appeared first on Dinakaran.

Related Stories: