இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகியும் வேலை வாங்கி தராமலும், வாங்கிய பணத்தை திருப்பி தராமலும் ராஜேந்திரன் ஏமாற்றி வந்தார். இதுதொடர்பாக சாந்தி, நேற்றுமுன்தினம் திருவாரூர் மாவட்ட எஸ்பி ஜெயகுமாரை நேரில் சந்தித்து புகார் அளித்தார்.எஸ்பி உத்தரவின்பேரில் முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து ராஜேந்திரனை தேடிவந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார். இதுகுறித்து அவரிடம் நடத்திய விசாரணையில், முத்துப்பேட்டை இடும்பாவனம், சிவன்கோவில் பகுதியை சேர்ந்த ஆனந்தவள்ளி என்பவரிடமும் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post பெண்ணிடம் ரூ.2.65 லட்சம் மோசடி பாஜ மாவட்ட செயலாளர் கைது appeared first on Dinakaran.