பருவ மழையின் காரணமாக வரத்து கால்வாய்கள் மூலம் நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்வதால் பூண்டி நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இன்றுகாலை நிலவரப்படி ஏரிக்கு நீர்வரத்து 700 கன அடியாக இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விநாடிக்கு 1000 கன அடி உபரிநீர் திறக்கப்படுள்ளது. நீர்வரத்து தொடர்ந்துஅதிகப்படியாகும் நிலையில் கூடுதல் உபரி நீர் படிப்படியாக திறக்கப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நீர்த்தேக்கத்தில் இருந்து மிகைநீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்கள் மற்றும் இரண்டு புறமும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று திருவள்ளூர் கலெக்டர் த.பிரபுசங்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
The post பூண்டி ஏரி நிரம்பியது; 1000 கன அடி உபரி நீர் வெளியேற்றம் appeared first on Dinakaran.