செல்போன், பணம் பறித்த 4 பேர் கைது

பேரையூர், டிச. 17: விருதுநகர் மாவட்டம், சூலக்கரை மாந்திநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாண்டி மகன் வேல்முருகன் (29). சமையல் வேலை செய்து வரும் இவர், டிச.3ம் தேதி பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள தேவன்குறிச்சி அக்னீஸ்வரர் ஆலயத்திற்கு சாமி கும்பிட வந்துள்ளார். பிறகு அங்குள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது, பாறையில் அமர்ந்திருந்த 4 பேர் வேல்முருகனைத் தாக்கி அவரிடமிருந்த 2 செல்போன்கள், ரூ.5 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து வழிப்பறி செய்த ராமலிங்காபுரம் கண்ணன் மகன் அழகர் (20), டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த அழகுமலை மகன் கண்ணன் (22), டி.குண்ணத்தூரை சேர்ந்த மைனர் சிறுவன், வாழ்நாயக்கன்பட்டி சீனிவாசன் மகன் அழகுமலை (21), ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

The post செல்போன், பணம் பறித்த 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: