புழல் சிறையில் இருந்து தப்பிய பெண் கைதி பெங்களூருவில் கைது


சென்னை: சென்னை புழல் சிறையிலிருந்து தப்பிச் சென்ற பெண் கைதி பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். சென்னை புழல் மத்திய பெண்கள் சிறையில் இருந்து சிறை கைதி ஜெயந்தி என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தப்பிச் சென்றார். புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், பெங்களூருவில் அவர் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீசார் அங்கு சென்று பெங்களூரு விமான நிலையம் அருகே உள்ள கங்கேரி என்ற பகுதியில் பதுங்கி இருந்த ஜெயந்தியை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர்.இதற்கிடையே, பெண் கைதியை தப்ப விட்ட வழக்கில் சிறைக் காவலர்கள் கனக லட்சுமி, கோகிலா ஆகிய இருவரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post புழல் சிறையில் இருந்து தப்பிய பெண் கைதி பெங்களூருவில் கைது appeared first on Dinakaran.

Related Stories: