பரிந்துரை பாஸ் வழங்கிய பா.ஜ.க. எம்.பி. பிரதாப் சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், காங்கிரஸ் எம்பியான ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்; இது ஏன் நடந்தது? நாட்டின் முக்கிய பிரச்சினை வேலையின்மை. பிரதமர் மோடியின் கொள்கைகளால் நாட்டின் இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் போனது. வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வே பட்டதாரி இளைஞர்களின் கோபத்துக்கு காரணம் என குற்றம் சாட்டினார்.
The post நாடாளுமன்றத்துக்குள் நடந்த நிகழ்வுக்கு வேலைவாய்ப்பின்மையே இளைஞர்களின் கோபத்துக்கு காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.