ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானி மகனுக்கு ரூ.1 கோடி அபராதம்


மும்பை: ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் தொடர்பான ஒரு வழக்கில் கார்ப்பரேட் கடன்களுக்கு ஒப்புதல் அளிக்கும் போது உரிய கவனம் செலுத்தத் தவறியதற்காக தொழிலதிபர் அனில் அம்பானியின் மகன் அன்மோல் அம்பானிக்கு செபி ரூ.1 கோடி அபராதம் விதித்தது. இந்த வழக்கில் ரிலையன்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் தலைமை இடர் அதிகாரி கிருஷ்ணன் கோபாலகிருஷ்ணனுக்கும் செபி ரூ.15 லட்சம் அபராதம் விதித்தது.

அன்மோல் அம்பானி மற்றும் கிருஷ்ணன் கோபாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் தங்களுக்கான அபராதத் தொகையை 45 நாட்களுக்குள் செலுத்துமாறு செபியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செபியின் விரிவான விசாரணையில் இருந்து அபராதம் விதிக்கப்பட்டது, ஆகஸ்ட் மாதம், அனில் அம்பானி மற்றும் 24 பேர் பத்திர சந்தையில் ஐந்தாண்டுகள் பங்குபெற தடை விதித்தது.

ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் போர்டு உறுப்பினராக இருந்த அன்மோல் அம்பானி, அத்தகைய அனுமதிகளைத் தவிர்க்க நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவின் தெளிவான அறிவுறுத்தல்களை மீறி ஜிபிசிஎல் கடன்களுக்கு ஒப்புதல் அளித்ததாக செபி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, பிப்ரவரி 14, 2019 அன்று, அக்குரா புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ. 20 கோடி கடனை அன்மோல் அனுமதித்தது, மேலும் ஜிபிசிஎல் கடன்களை வழங்க வேண்டாம் என்று பிப்ரவரி 11 அன்று நிர்வாகத்திற்கு வாரியம் உத்தரவிட்ட சில நாட்களுக்குப் பிறகு அன்மோலின் நடவடிக்கைகளை செபி விமர்சித்தது,

கோபாலகிருஷ்ணன் வழக்கில், அவர் பல்வேறு ஜிபிசிஎல் கடன்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், கடன் ஒப்புதல் செயல்முறைகளில் குறிப்பிடத்தக்க விலகல்களை அவர் அறிந்திருப்பதாகவும் செபி குறிப்பிட்டது. அன்மோல் அம்பானி மற்றும் கோபாலகிருஷ்ணன் இருவரும் செபியின் பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள் (LODR) விதிகளை மீறியது கண்டறியப்பட்டது.

The post ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானி மகனுக்கு ரூ.1 கோடி அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: