சீர்மரபினர் நல வாரிய தலைவர்,உறுப்பினர்கள் முதல்வரிடம் வாழ்த்து

சென்னை: தமிழக அரசின் சீர்மரபினர் நல வாரியத்தின் தலைவராக அமைச்சர் ராஜகண்ணப்பன், துணை தலைவராக இராசா.அருண்மொழி மற்றும் 13 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாரிய தலைவர் அமைச்சர் ராஜகண்ணப்பன், துணை தலைவர் இராசா.அருண்மொழி மற்றும் 13 உறுப்பினர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தக்கர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் சம்பத் ஆகியோர் உடனிருந்தனர்.

The post சீர்மரபினர் நல வாரிய தலைவர்,உறுப்பினர்கள் முதல்வரிடம் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: