ஆவடி மாநகராட்சியில் ரூ.10 கோடியில் கால்வாய் பணி: சா.மு.நாசர் எம்எல்ஏ துவக்கினார்

ஆவடி: ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டில் நேற்று மாலை ரூ.10.4 கோடி மதிப்பில் புதிய கால்வாய் அமைக்கும் பணிகளை சா.மு.நாசர் எம்எல்ஏ பங்கேற்று துவக்கி வைத்தார். பின்னர், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதி மக்களுக்கு பல்வேறு நிவாரண பொருட்களை வழங்கினார். ஆவடி மாநகராட்சி, 5வது வார்டான கோவில்பதாகை பகுதியில் நேற்று மாலை ரூ.10.4 கோடி மதிப்பில் புதிதாக 2196 மீடடர் நீளத்துக்கு மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் சா.மு.நாசர் எம்எல்ஏ பங்கேற்று, புதிய மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளைத் துவக்கி வைத்தார்.

பின்னர், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட நடுக்குத்தகை, பட்டாபிராம், கவரபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 1500க்கும் மேற்பட்ட மக்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் உள்பட பல்வேறு நிவாரண பொருட்களை வழங்கினார்.இதில் ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், மாநகர பொறுப்பாளர் சண்.பிரகாஷ், பகுதி செயலாளர்கள், 5வது வார்டு மாமன்ற உறுப்பினர் செண்பகவல்லி ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஆவடி மாநகராட்சியில் ரூ.10 கோடியில் கால்வாய் பணி: சா.மு.நாசர் எம்எல்ஏ துவக்கினார் appeared first on Dinakaran.

Related Stories: