சரியாக 2.30 மணிக்கு பேசின் பிரிட்ஜ் பணிமனைக்குள் நுழைந்த போது ரயில் பெட்டியின் ஒரு கோச்சிலிருந்த 4 சக்கரங்கள் தரையிறங்கின. அதில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து, ஓட்டுநர் ரயிலை உடனடியாக நிறுத்தினார் . சம்பவம் குறித்து பணியிலிருந்த ஊழியர்கள் உயரதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் தரையிறங்கிய 4 சக்கரங்களை மேலே கொண்டுவரும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மழை பெய்து வருவதால் சற்று இந்த பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
The post சென்னை பேசின் பிரிட்ஜில் ரயில் தடம் புரண்டு விபத்து: பயணிகள் யாரும் இல்லாததால் விபத்து தவிர்ப்பு appeared first on Dinakaran.