ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்த கூடாது: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: ஆவின் பால் நிறுவனம் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி அளித்துவிட்டு, அதனை ஈடுகட்ட ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தக் கூடாது. ஏற்கனவே ஆவின் பால் நிறுவனம் பால் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. மீண்டும் உயர்த்தினால் பால் நுகர்வோர்கள் பாதிக்கப்படுவார்கள். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாகவும், பால் உற்பத்தியாளர்களையும், பால் நுகர்வோர்களையும் பாதுகாப்பதாகவே அதன் செயல்பாடுகள் அமைய வேண்டும்.

The post ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்த கூடாது: ஜி.கே.வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: