குண்டர் சட்ட அறிவுரை கழகத்தில் நீதிபதிகள் முன் ரவுடி கருக்கா வினோத் ஆஜர்..!!

சென்னை: ரவுடி கருக்கா வினோத் குண்டர் சட்ட அறிவுரை கழகத்தில் நீதிபதிகள் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அக்டோபர்.25ல் ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக ரவுடி கருக்கா வினோத் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள குண்டர் சட்ட அறிவுரை கழகத்தில் நீதிபதி முன் கருக்கா வினோத் ஆஜர் செய்யப்பட்டார்.

The post குண்டர் சட்ட அறிவுரை கழகத்தில் நீதிபதிகள் முன் ரவுடி கருக்கா வினோத் ஆஜர்..!! appeared first on Dinakaran.

Related Stories: