கடையநல்லூர் அருகே மணல் கடத்திய 4பேர் கைது

கடையநல்லூர், டிச.13: கடையநல்லூர் அருகே மணல் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். சொக்கம்பட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முகமதுகனி தலைமையிலான போலீசார் சொக்கம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக டிராக்டரில் சிலர் மணல் கொண்டு சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து மணல் கடத்திய சொக்கம்பட்டியை சேர்ந்த முத்துக்குமார்(35), அய்யாதுரை(40), வேல்முருகன்(27), மகாராஜன்(30), குமார்(25), லட்சுமணபாண்டியன் (39), விக்னேஷ் (26), குழந்தைராஜா(35) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் அய்யாதுரை, வேல்முருகன், மகாராஜன், லட்சுமணபாண்டியன் ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 2 டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.

The post கடையநல்லூர் அருகே மணல் கடத்திய 4பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: