பின்னர் திரு.வி.க.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்ப்பட்ட மாநகராட்சி வார்டு எண் 74-ஐ சேர்ந்த 1,000 குடும்பங்களுக்கும், வார்டு எண் 71-ஐ சேர்ந்த 1,000 குடும்பங்களுக்கும், கொளத்தூர் சட்டமன்ற தொகுதி, மாநகராட்சி வார்டு எண் 66-ஐ சேர்ந்த வெற்றிநகர் பகுதியில் 1,000 குடும்பங்களுக்கும், வார்டு எண் 69-ஐ சேர்ந்த அகரம் பகுதியில் 1,000 குடும்பங்களுக்கும் நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன், மண்டலக் குழுத்தலைவர் சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் இளம்சுருதி, ராஜேஸ்வரி ஸ்ரீதர், சுந்தர்ராஜன், பரிமளம், புனிதவதி,நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post கொளத்தூர், துறைமுகம், எழும்பூர், திரு.வி.க.நகர் தொகுதிகளில் 12,000 குடும்பங்களுக்கு நிவாரண உதவி: அமைச்சர் சேகர்பாபு வழங்கினார் appeared first on Dinakaran.