முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடிக்கான காசோலையை வழங்கினர் சன் குழும தலைவர் கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி மாறன்!..

சென்னை: முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடிக்கான காசோலையை சன் குழும தலைவர் கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி மாறன் வழங்கினர். சென்னையில் மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத இடைவிடாமல் பெய்த கன மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. வீடுகள், சாலைகள், குடியிருப்பு பகுதிகள் என பல்வேறு இடங்களிலும் வெள்ளநீர் தேங்கியது. மழை வெள்ளத்தால் ஏராளமான சேதங்கள் ஏற்பட்டது.

மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கோடிக்கனக்கான பொது சொத்துக்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண நிதியாக இன்று முகாம் அலுவலகத்தில் வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சன் குழும தலைவர் கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி மாறன் ரூ.5 கோடிக்கான காசோலையை வழங்கியுள்ளனர்.

The post முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடிக்கான காசோலையை வழங்கினர் சன் குழும தலைவர் கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி மாறன்!.. appeared first on Dinakaran.

Related Stories: