சிவகங்கை, டிச.10: சிவகங்கை மாவட்டத்தில் நடந்த லோக் அதாலத்தில் 727 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதல் பேரில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் 9மக்கள் நீதிமன்றம்(லோக் அதாலத்) அமைக்கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதில் ஆயிரத்து 228 குற்ற வழக்குகள், 156 செக்மோசடி வழக்குகள், 208 வங்கிக்கடன் வழக்கு, 137 வாகன விபத்து நஷ்டஈடு வழக்கு, 139குடும்ப பிரச்னை வழக்கு, 319சிவில் வழக்கு என மொத்தம் ஆயிரத்து 804வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டன. இதில் 663 வழக்குகள் சமரசமாக முடித்து வைக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.2கோடியே 16லட்சத்து 80ஆயிரத்
திற்கு தீர்வு காணப்பட்டது.
வங்கி கடன் நிலுவை சம்பந்தமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத 450 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 64வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.55லட்சத்து 89ஆயிரத்திற்கு தீர்வு காணப்பட்டது. சிவகங்கை முதன்மை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவத்சலு, மாவட்ட கூடுதல் நீதிபதி சத்தியதாரா, குடும்பநல நீதிபதி முத்துக்குமரன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி பரமேஸ்வரி, சார்பு நீதிபதி சுந்தரராஜ், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் அனிதாகிரிஸ்டி, செல்வம் மற்றும் வழக்கறிஞர்கள் வழக்குகளை விசாரித்தனர்.
The post சிவகங்கை மாவட்டத்தில் லோக் அதாலத்தில் ரூ.2.16 கோடிக்கு தீர்வு appeared first on Dinakaran.
