கமுதி, டிச.10: கமுதி அருகே அரசு பேருந்து விபத்துக்குள்ளாதில் மூன்று பெண்கள் படுகாயம் அடைந்தனர். கமுதி அருகே அரசு நகரப் பேருந்து ஒன்று நேற்று நல்லாங்குளம் கிராமத்தில் இருந்து புறப்பட்டு ராமசாமிபட்டி வழியாக, கூலிப்பட்டி கிராமம் பகுதிக்கு வந்து கொண்டிருந்தது. பேருந்தில் 60 பயணிகள் இருந்துள்ளனர். பேருந்தின் ஸ்டேரிங் என்ட் தீடீரென உடைந்ததில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரத்தில் உள்ள ஓடையில் இறங்கி விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தில் வந்த கூலிபட்டியை சேர்ந்த சுசீலா (57),மஞ்சுளா(50), விஜயலட்சுமி(50) ஆகிய மூன்று பெண்களும் தலையில் பலத்த காயமடைந்தனர். உடனடியாக மூன்று பேரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post விபத்தில் சிக்கிய அரசு பேருந்து 3 பெண்கள் படுகாயம் appeared first on Dinakaran.
