நாகர்கோவிலில் மாவட்ட சதுரங்கப் போட்டி

நாகர்கோவில், டிச. 9: ரோட்டரி கிளப் ஆப் நாகர்கோவில் எலைட், கன்னியாகுமரி மாவட்ட சதுரங்கக் கழகம் இணைந்து நடத்திய மாவட்ட சதுரங்க விளையாட்டு போட்டி மீனாட்சிபுரத்தில் நடந்தது. 7, 9, 11, 13 வயது பிரிவுகள் மற்றும் வயது வரம்பின்றி பொது பிரிவாகவும் போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் 330 பேர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் பள்ளிகளுக்கான சிறப்பு பரிசினை பிஷப் ரெமிஜியுஸ் பள்ளி மற்றும் தக்கலை அரசு உயர்நிலைப்பள்ளி பெற்றது. அனைத்து பிரிவுகளிலும் முதல் 10 இடங்களை பிடித்த வீரர், வீராங்கனைகளுக்கு ரொக்கபரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

The post நாகர்கோவிலில் மாவட்ட சதுரங்கப் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: