தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைக்க வேண்டும் என்றால் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி இன்று வெற்றி பெற்றாக வேண்டும். முதல் தோல்விக்கு பதிலடி தந்தால்தான் தொடர் 1-1 என சமநிலைக்கு வரும். எனவே முதல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஷபாலி வர்மா போலவே மற்றவர்களும் அதிரடியாக விளையாடி ரன் குவிக்க வேண்டும். ரேணுகா சிங் போல் சிறப்பாக பந்து வீச வேண்டும். சொந்த மண்ணில் விளையாடும் சாதகத்தை இந்திய மகளிர் சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.
முதல் ஆட்டத்தில் வென்ற உற்சாகத்துடன் ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி களமிறங்குகிறது. கூடவே முதல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய டேனியலி வியாட், நடாலியா ப்ரன்ட், ஆமி ஜோன்ஸ், ஷோபி எக்கல்ஸ்டோன், சாரா கிளென் ஆகியோர் கை கொடுக்க காத்திருக்கின்றனர். மேலும் இந்த ஆட்டத்தில் வெல்வதின் மூலம் 2-0 என்ற கணக்கில் முன்னிலையை அதிகரிப்பதுடன் தொடரையும் வெல்ல முடியும். இரு அணிகளும் இன்று வெற்றிக்கு மல்லுக்கட்டுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது.
The post மகளிர் டி20 கிரிக்கெட் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? appeared first on Dinakaran.