எம்பி பதவியை ராஜினாமா செய்தார் ரேவந்த் ரெட்டி

புதுடெல்லி: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைப்பிடித்தது. புதிய முதல்வராக ரேவந்த் ரெட்டி நேற்று முன்தினம் பதவி ஏற்றார். இதை தொடர்ந்து நேற்று டெல்லி சென்ற ரேவந்த் ரெட்டி தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். அவர் மல்காஜிகிரி எம்பியாக உள்ளார். தற்போது தெலங்கானா முதல்வராக பதவி ஏற்று இருப்பதால் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவை சந்தித்து தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.

The post எம்பி பதவியை ராஜினாமா செய்தார் ரேவந்த் ரெட்டி appeared first on Dinakaran.

Related Stories: