மனுவை பெற்ற எம்எல்ஏ, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார். இதையடுத்து மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து பொறங்கால் கிராமத்தில் கலையரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. எம்எல்ஏ மரகதம் குமரவேல் கலந்துகொண்டு, அடிக்கல் நாட்டி பணியை துவக்கிவைத்தார். இதில், அதிமுக ஒன்றிய செயலாளர் ரங்கராஜன், அவைத்தலைவர் சந்திரபாபு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
The post பொறங்கால் கிராமத்தில் ரூ.7.70 லட்சத்தில் கலையரங்கம் கட்ட அடிக்கல் நாட்டு விழா: எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.