இதையடுத்து மகுவா மொய்த்ராவின் எம்.பி. பதவி பறிப்புக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மகுவா மொய்த்ராவின் எம்.பி. பதவி பறிப்பு ஜனநாயக விரோத நடவடிக்கை என்று மார்க்சிஸ்ட் எம்.பி. பி.ஆர்.நடராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது மோசமான அரசியலுக்கான உதாரணமாகும். அதானியை பற்றி விமர்சித்தால் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்பதையே இது காட்டுகிறது அவர் தெரிவித்தார்.
மகுவா மொய்த்ராவின் எம்.பி. பதவி பறிப்பு, மோடி அரசின் எதேச்சதிகாரத்தின் உச்சம் என்று இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. கே .சுப்பராயன் காட்டம் தெரிவித்துள்ளார். அதானி-மோடிக்கு இருக்கக்கூடிய உறவை ஆதாரத்துடன் மகுவா மொய்த்ரா அம்பலப்படுத்தினார் என்று அவர் கூறினார்.
The post மகுவா மொய்த்ராவின் எம்.பி. பதவி பறிப்பு ஜனநாயக விரோத நடவடிக்கை: மார்க்சிஸ்ட் எம்.பி. பி.ஆர்.நடராஜன் கண்டனம் appeared first on Dinakaran.