மிக்ஜாம் புயல் சேதம்: சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய அமைச்சர்கள்..!!

மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிச. 3, 4ம் தேதிகளில் பெய்த தொடர் கனமழை, கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் வடியாத பகுதிகளில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களை தமிழக அரசும், பல தன்னார்வ அமைப்புகளும் வழங்கி வருகின்றன. அமைச்சர்கள் உதயநிதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எவ வேலு, சேகர்பாபு, கே.என்.நேரு, சக்கரபாணி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளைகளை வழங்கினர்.

The post மிக்ஜாம் புயல் சேதம்: சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய அமைச்சர்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: