கரடி பொம்மைகளுக்கு சிகிச்சை அளிக்கும் அதிசய மருத்துவமனை!

பழுதுபட்ட கரடி பொம்மைகளை சிகிச்சைக்காக அழைத்துவந்து, தேவைப்படும் சிகிச்சையை மேற்கொண்ட பின் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் ‘டெடி பேர்’ மருத்துவமனை என்ற நிகழ்வை வியன்னா மருத்துவ சங்கம் நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் 60 டாக்டர்கள் பங்கேற்றனர். மருத்துவரிடமும் மருத்துவமனைக்கும் செல்ல பயப்படும் குழந்தைகள் மட்டுமல்ல, 13 வயதுக்கு உட்பட்ட எல்லாக் குழந்தைகளுமே தங்களுக்குப் பிடித்தமான கரடி பொம்மையுடன் பெற்றோர், பள்ளி ஆசிரியர் துணையுடன் தனியாகவோ குழுவாகவோ இங்கே வருகிறார்கள். தங்கள் பொம்மைகளை டெடி டாக்டரிடம் காட்டுகிறார்கள். அவர் ஸ்டெதஸ்கோப் வைத்து சோதனை செய்தபின் ஸ்கேன் செய்யப் பரிந்துரைக்கிறார். பின்னர் பொம்மைக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது. பிறகு குணமாகிவிட்டதாகக் கூறி வீட்டுக்கு அனுப்புகிறார்கள்.

The post கரடி பொம்மைகளுக்கு சிகிச்சை அளிக்கும் அதிசய மருத்துவமனை! appeared first on Dinakaran.

Related Stories: