புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது: செயற்பொறியாளர்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியான புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் ஏரிக்கு நீர்வரத்து கூடுதலாக இருந்தது. மழை பெய்தபோது ஏற்பட்ட கடுமையான சூறாவளி காற்றால் ஏரியில் மிக கடுமையான அளவில் அலைகள் ஏற்பட்டன. புழல் ஏரியின் கலங்கல் வழியாக அலைகளால் தண்ணீர் வெளியேறியதால் சாலையில் அரிப்பு ஏற்பட்டது. தற்போது மண் அரிப்பு ஏற்பட்ட சாலை பகுதிகளில் கிராவல் மண் கொட்டி மட்டப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
புழல் ஏரிக்கு பாதிப்பு இல்லை: அமைச்சர் துரைமுருகன்
புழல் ஏரிக்கு எந்த பாதிப்பும் இல்லை, வடசென்னை மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
The post புழல் ஏரிக்கு எந்த பாதிப்பும் இல்லை, வடசென்னை மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.