இதன் மூலம் கடந்த 3ம் தேதி முதல் நேற்று வரை சென்னை காவல் குழுவினர் மற்றும் மாவட்ட பேரிடர் மீட்பு குழுவினர் மூலம், சென்னையில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் சிக்கி தவித்த 6,560 பொதுமக்கள் படகுகள், காவல் வாகனங்கள் மூலமும் மீட்கப்பட்டு, அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குவதற்கு வசதி செய்து தரப்பட்டது. சென்னை காவல்துறை, மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினருடன் ஒருங்கிணைந்து, சென்னை பெருநகரில் சாலைகளில் விழுந்த 465 மரங்களை அறுத்து அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தது. தொடர்ந்து, கடந்த 3 நாட்கள் நடந்த மீட்பு மற்றும் நிவாரண பணியின்போது, சாலைகளில் உள்ள மழைநீரில் சிக்கிய 489 வாகனங்கள் மீட்கப்பட்டது.
மழைநீர் சூழ்ந்த இடங்கள் மற்றும் மீட்கப்பட்ட பொதுமக்களை தங்க வைக்கப்பட்ட இடங்களில் என சென்னை காவல்துறை 21,967 உணவு பொட்டலங்களை வழங்கியது. சென்னை காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக அமைக்கப்பட்ட தற்காலிக அவசர செயலாக்க மையத்தில், இதுவரை பொதுமக்களின் 1,496 தொலைபேசி அழைப்புகளுக்கு, உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து பொதுமக்கள் குறைகள் உடனடியாக தீர்த்து வைக்கப்பட்டன.
The post மழைநீர் சூழ்ந்த பகுதியில் இருந்து 6560 பொதுமக்கள் மீட்பு: 21,967 உணவு பொட்டலம் சப்ளை appeared first on Dinakaran.