இந்நிலையில், நேற்று காலை அடையாறு திருவிக பாலத்தின் மீது பலர் நின்று கொண்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை வேடிக்கை பார்த்துக் ெகாண்டிருந்தனர். அப்போது பாலத்தின் அருகே பூக்கடைகள் வரிசையாக உள்ள பகுதியில் திடீரென விரிசல் ஏற்பட்டு ராட்சத பள்ளம் உருவானது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே அரசு துறைகளுக்கு தகவல் தெரிவித்தனர். சென்னை மாநகராட்சி அதிகாரிகள், சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள், தீயணைப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். இதை ஆய்வு செய்த போது, திருவிக பாலத்தை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள ராட்சத கழிவுநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டதும், இதனால் ராட்சத பள்ளம் உருவாகியுள்ளதும் தெரிந்தது. இதில் கழிவுநீர் ஊற்றெடுத்து வருவதால் சாலையை ஒட்டியுள்ள கடைகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இந்த பள்ளத்தால் பெரும் பிரச்னை உருவாகிவிடக்கூடாது என்பதற்காக அதிகாரிகள் அதை மூடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
உடனே அந்த பகுதியை தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். போர்க்கால அடிப்படையில் ராட்சத குழாயில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்து, அதனால் உருவான பள்ளங்களை மூடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மத்திய கைலாசில் இருந்து திருவான்மியூர் செல்லும் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது.
The post ராட்சத கழிவுநீர் குழாய் உடைந்தது அடையாறு திரு.வி.க பாலம் அருகே திடீர் விரிசல்: போக்குவரத்து நிறுத்தம் appeared first on Dinakaran.