இதனையடுத்து நேற்று டெல்லியில் கார்கே தலைமையில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், தெலங்கானா மாநில மூத்த தலைவர்கள் பட்டி விக்ரமார்கே, உத்தம் குமார், கோமட்டி ரெட்டி வெங்கட ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் வேணுகோபால் நிருபர்களிடம் கூறுகையில், தெலங்கானா மாநில சட்டப்பேரவை தலைவராகவும், முதல்வராகவும் ரேவந்த் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.
இதனால் யார் முதல்வர் என பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் அவை முடிவுக்கு வந்துள்ளது. இனி யார் யாருக்கு துணை முதல்வர், அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற தகவல் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post டெல்லியில் கார்கே, ராகுல் ஆலோசனைக்கு பிறகு தெலங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி தேர்வு appeared first on Dinakaran.