தற்போது மணிக்கு 7 கி.மீ தொலைவில் நகரும் மிக்ஜாம் புயல் நெல்லூரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது. இன்று பகல் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே பபட்லா அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீவிர புயலாக கரையை கடக்க உள்ளதால் அப்போது 100 கி.மீ.க்கு மேல் காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் விலகிச் சென்ற நிலையில் சென்னையில் 2 நாட்களுக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியது. பல இடங்களில் மழை நீர் வடிந்து வருகிறது; பேருந்து போக்குவரத்து சீரடைகிறது.
The post சென்னையில் இருந்து விலகிச் சென்ற மிக்ஜாம் புயல்: மசூலிப்பட்டினத்தை நெருங்குகிறது: வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட் appeared first on Dinakaran.