நீச்சல் பழகிய மாணவிகள் ஊருணி நீரில் மூழ்கி பலி

இளையான்குடி: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே கீழாயூர் கிராமத்தை சேர்ந்தவர் ரியாஸ். இவரது மகள்கள் அமீனா நஸ்ரின் (21), சலிமத் ஆஷிபா (14). இதே பகுதியை சேர்ந்த ஜாகீர் உசேன் மகள் நூருல் மஜிதா (15). சலிமத் ஆஷிபா பத்தாம் வகுப்பு, நூருல் மஜிதா பிளஸ் 1 படித்து வந்தனர். விடுமுறை தினமான நேற்று காலை அமீனா நஸ்ரின், சலிமத் ஆஷிபா, நூருல் மஜிதா ஆகியோர் இப்பகுதியிலுள்ள ஊருணிக்கு நீச்சல் பழக சென்றனர். டூவீலர் டியூப்பில் காற்றை நிரப்பி ஊருணியில் மூன்று பேரும் நீச்சல் பழகினர். அப்போது திடீரென டியூப்பில் இருந்து காற்று வெளியேறியதால் அனைவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து, ஊருணியில் குளித்து கொண்டிருந்தவர்கள் மூன்று பேரையும் மீட்டு இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சலிமத் ஆஷிபா, நூருல் மஜிதாவை பரிசோதித்த டாக்டர்கள், இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆபத்தான நிலையில் அமீனா நஸ்ரினுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post நீச்சல் பழகிய மாணவிகள் ஊருணி நீரில் மூழ்கி பலி appeared first on Dinakaran.

Related Stories: