தமிழ்நாட்டில் மழைப்பதிவு!!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது. கோவை மாவட்டம் மாக்கினாம்பட்டி, பொள்ளாச்சி, தூத்துக்குடியில் நேற்று கனமழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டியில் 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. பொள்ளாச்சி, தூத்துக்குடியில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது. கோவை மாவட்டம் ஆழியார், ஸ்ரீவில்லிபுத்தூர், நத்தம், வீரபாண்டி, நீலகிரி பார்வுட் எஸ்டேட்டில் தலா 6 செ.மீ. மழைப்பதிவாகி உள்ளது. குமரி மாவட்டம் கலியல், மைலாடி, கோவை மாவட்டம் சின்கோனாவில் தலா 5 செ.மீ. மழைப் பொழிந்துள்ளது. திற்பரப்பு. கோழிப்போர்விளை உள்ளிட்ட 12 இடங்களில் தலா 4 செ.மீ. மழையும், ஆனைக்கிடங்கு, எலந்தகுட்டை மேடு, சந்தியூர், மூலனூர் உள்ளிட்ட 17 இடங்களில் தலா 3 செ.மீ. மழையும் [பெய்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 50க்கும் மேற்பட்ட இடங்களில் 2 செ.மீ. மழை, 100க்கும் மேற்பட்ட இடங்களில் 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
The post வெளுத்துக்கட்டும் கோடை மழை… கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை; தமிழ்நாட்டில் பொள்ளாச்சி, தூத்துக்குடியில் கனமழை!! appeared first on Dinakaran.